ட்டய்கு ரியோக்கன் கவிதைகள் - தமிழில் - சர்வோத்தமன்





இறுக்கமாக இருப்பதற்கு சோர்வாக இருக்கிறது

இறுக்கமாக இருப்பதற்கு சோர்வாக இருக்கிறது
இந்த உலகம் தன்னைத்தானே நிர்வகித்துக்கொள்ளட்டும்
என விட்டுவிட்டேன்
என் பொதியில் பத்து நாட்களுக்கு வரக்கூடிய அரிசி
அடுப்பக்கருகில் ஒரு கட்டுச் சுள்ளிகள்.
ஏன் அகவிழிப்பு பற்றியும் மயக்கத்தை பற்றியும்
தொணதொணக்க வேண்டும்
கூரையின் மீது விழும் இரவு மழையை
கவனித்தவாறு
நான் என் இரு கால்களையும் நீட்டி
செளகரியமாக அமர்கிறேன்.

Too lazy to be ambitious

Too lazy to be ambitious,
I let the world take care of itself.
Ten days worth of rice in my bag;
a bundle of twigs by the fireplace.
Why chatter about delusion and enlightenment?
Listening to the night rain on my roof
I sit comfortably , with both legs stretched out.

மத்திமக் கோடைக்காலம்

மத்திமக் கோடைக்காலம்
நான் எனது கழி கொண்டு வெறுமனே நடக்கிறேன்
முதிய விவசாயிகள் என்னை கண்டுகொண்டு
பருகுதலுக்காக அழைக்கிறார்கள்
நாங்கள் வயல்வெளியில் அமர்ந்து
இலைகளை தட்டுகளாக பயன்படுத்துகிறோம்.
மிகுந்த மகிழ்ச்சி மேலும் இனிமையாக குடித்திருந்தேன்
நான் நெல் வரப்பின் மீது படர்த்தியவாறு
நிறைவாக கடக்கிறேன்.

Midsummer

Midsummer
I walk about with my staff.
Old farmers spot me
And call me over for a drink.
We sit in the fields
using leaves for plates.
Pleasantly drunk and so happy
I drift off peacefully
Sprawled out on a paddy bank.

-- ட்டய்கு ரியோக்கன்