இது குளிர்காலக் கவிதை - மனோ ரெட்


 குளிரில் 
மனம் விட்டு பேச
ஆசை தான்..,
மனதை எங்கோ விட்டு விட்டு
யாரிடம் எதைப் பேச...!!
இழுத்து போர்த்தினாலும்
குளிர் வந்து
வம்புக்கு இழுக்கிறது,
கூடவே

குளிரில்
கடிப்பதற்கு எதுவுமில்லை,
அப்படியெல்லாம்
ஒன்றுமில்லை,
பற்களுக்கு கடிக்க
பற்கள் இருக்கிறது..!!
முடிகள் பேசி
விடாமல்
முடிகளுடன்
முடிகள் பேசி
அமைதி கொள்கிறது குளிர்...!!
அனல் தெளிக்கும்
மூச்சைக் கக்கினாலும்,
அடங்க மறுக்கிறது குளிர்,

குளிரின் கதவுகளுக்கு
கூச்சம் ஏதுமில்லை,
கதகதப்பின் கள்ள சாவிக்கு
தூக்கத்தின் வாசலை
விலையின்றி
விற்பனை செய்கிறது..!!
எல்லா குளிர் காலமும்
ஏக்கத்துடனே முடிகிறது,