குரங்குகளும் சில நினைவுகளும் - வேலு பாலசுப்பிரமணியன்


 இரெண்டொரு வருடங்களுக்கு முன்பு 
அருவிகள் வழிந்தோடும் ஊரின் 
அணைத்துக் கிடந்த இருளின் ஓரத்திலிருந்து 
அடிக்கடி கைப்பேசி ஒளிர 
கதைத்துக் கொண்டிருந்தோம் இருவரும்
நீ அங்கும் நான் இங்குமாக  

நீ, லட்டு பையன் என்னைப்போலவே 
உன்னை துரத்துவதாய் சொல்லிக்கொண்டிருந்தாய் 
உன்னுள் மட்டும் புதைத்து வைத்திருக்கும் 
பெயர்சொல்லாத  இன்னும் சிலபேரும் 
காதல் சொல்லியும், சொல்லாமலும் 
காத்துக்கிடப்பதாயும் பகிர்ந்து கொண்டாய் 

நாம் கதைக்கையில் 
சன்னல்வழி  வந்த சாரலும் 
என்னை நனைத்துக் கொண்டிருந்தது
சில குரங்குகளும் விழித்துக் கிடந்தன  

உன்னைச் சுற்றிவரும்
எல்லோரையும் ரசிப்பதாயும் 
பிடிப்பதாயும் நீ சொல்லிக்கொண்டிருக்கையில் 
குரங்குகள் சப்தமிடத் தொடங்கின 

மறுநாள் பெய்த மழையிலும் 
மறக்காமல் தொடர்ந்தது நம் கதைப்பு 
கொஞ்சம் அந்தரங்கம் பேசத்தொடங்கியிருந்தோம் 
சுயமைதூனம் செய்கையில் 
நின்னை பின்னிருந்து புணர்வதாக 
நான் கற்பனை செய்துகொள்வேன் 
எனச் சொல்லுகையில் 
நீ சிலநொடி மௌனித்து 
பின் ஆச்சர்யப்படுத்தினாய்

முன், பின் ஆக்கிரமிப்பைப பற்றி
நான் சொல்லிக்கொண்டிருக்கையில் 
அதிகம் சத்தமிடுவேன் என நினைக்கிறேன் என்றாய்
பிறகு மன்னிப்பொன்றும் சொன்னாய்
எல்லைதாண்டியாதாய் நினைத்துகொண்டு 
கெளுக்கென்ற உன் மனதின் சிரிப்பொலி 
கேட்டத் தருணம் அது 

இளமை மருவி 
அங்கங்கள் ஸ்திரத்தன்மை 
இழந்துவிட்டதாய் சொன்னாய் 
வருத்தம் தெறிக்கும் தொனியில் 
எனக்கு நீயென்பது நின் உடலல்ல 
என்று சொல்லிக்கொண்டிருந்தேன்  

உன் அங்கங்களில் அளவுகளை 
சொல்லிக்கொண்டிருந்தாய் 
நான் குறித்து வைத்துக் கொண்டிருந்தேன் 
சாரல் வலுத்திருந்தது  
குரங்குகளின் சேட்டையும்

அடுத்தநாள் பெய்த 
எதிர்பாராத அடைமழையில் 
வானம் தெளிந்திருந்தது 
சாரல் தொலைந்திருந்தது 
சில குரங்குகள் மரித்திருந்தன
எண்ணற்ற இழைகள் உதிர்ந்தும் கிடந்தன