பாண்டூவின் இயற்பெயர் இரா.இரமேஷ் பாண்டி. சிவகாசியை சேர்ந்தவர். இவரது படைப்புகள் “நெருப்பாற்று நீச்சல் – கந்தகப்பூக்கள்” (2009),.நவீன தமிழ் இலக்கியம் சில
பார்வைகள்,.படைப்பு அகமும் புறமும் – கந்தகப்பூக்கள் (2013) மற்றும் செந்தமிழ் ஆய்வுக்கோவை
ஆகிய
நூல்களில் வெளியாகி உள்ளன. இவரது கவிதைத் தொகுப்பு “பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்” (2013).
- 23 ஜூலை 2006 – “மெல்லத் தமிழினி வாழும்” கவிதை கருங்குழி - திருவள்ளுவர் தமிழ்ப் பட்டறையால் பாராட்டுப் பத்திரம் பெற்றது
- 27 அக்டோபர் 2013 – ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவை மற்றும் ‘துளி’ திங்களிதழ் ‘கந்தகக்கவி’ என்ற பட்டம் வழங்கியது.
- 23 டிசம்பர் 2013 – கவிஞர் சுராவின் ‘செந்தமிழ் அறக்கட்டளை’ மற்றும் வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில் ‘கவிச்செம்மல்’ என்ற பட்டமும், ரூ.1000/- ரொக்கப் பரிசும் தந்து கொளரவித்தது.
- 5 ஜனவரி 2014 – சென்னை மருத்துவ அறிவியல் கழகத்தால், 23 ஆவது மருத்துவ மாநாட்டில் சிறந்த எழுத்தாளராக தேர்வு செய்யப்பட்டு, தியாகி டி.எம்.சுவாமிநாதன், தோப்பூர் சுப்பிரமணியம் நினைவுப் பொற்கிழி விருதும், சான்றிதழும் வழங்கப்பட்டது
தற்போதைய பொறுப்பு :
1. கந்தகப்பூக்கள் இலக்கிய அமைப்பு உறுப்பினர்
2. கந்தகப்பூக்கள்
இதழ் ஆசிரியர் குழு
3. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
விருதுநகர் மாவட்ட செயற்குழு
உறுப்பினர் மற்றும்
சிவகாசி கிளை
நிர்வாகக்குழு உறுப்பினர்.
படைப்புகளை வெளியிட்டுள்ள இணையதளங்கள் :
www.vaarppu.com
www.orukavithai.com
www.thozharjeeva.blogspot.in
www.neelanilaa.blogspot.in
கவிதைகளை வெளியிட்டுள்ள இதழ்கள் :
- கந்தகப்பூக்கள்
- தினமலர் வாரமலர்
- என்லைட்டர்
- நீலநிலா
- ஏழைதாசன்
- வணக்கம் சிவகாசி
- பயணம்
- எஸ்.பி.பி. போஸ்ட்
- வளரி
- கதவு
- இன்று மலர்
- உண்மை
- ஜனசக்தி
- ஆரத்தி
- தாமரை
- உங்கள் நூலகம்
பங்கேற்றுள்ள ஊடகங்கள் :
கோடைப்பண்பலை வானொலி நிலையம்
டிடி பொதிகையில் :
- ‘இலக்கிய ஏடு’ பகுதியில் நூல் விமர்சனம்
- ‘கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேனீர்’ நிகழ்வில் சிறப்பு விருந்தினர்.