ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் - முத்துக்கிருஷ்ணன் ராஜாராம்



சாத்தானின் இரட்டைக் கொம்புகளில்
சத்தமின்றி சந்தம் பயின்று

ஆய்த எழுத்தில்
தலை கீழாய் கருத்தொருமித்த
ஏராளக் கணங்களில்

உயர் மெய், உயிர் மெய்யில்
நினைவு நிறுத்தி
துணை எழுத்தாய் மெய் எழுத்து தேடி

அங்கும் இங்கும் பார்த்து நிற்கையிலே
மாறுகிறேன் நான்

ஒரு
ஒற்றைக்கொம்பு

காண்டாமிருகமாய்.