வெளி விட்டு பிரிந்து வெளியேறுதல் - குமரகுரு




தொட்டியில் இருந்த கஞ்சா செடியின் 
நெடி பட்டு திறந்த வெளியில் 
விரிந்து கிடக்கிறோம் 

உடைபட்டு கிடக்கும் அண்டத்தின் 
மிகவும் நெடிய பால்வழியெங்கும் 
துளிர் விட்ட விதைகள் 

நாய்களின் மூத்திர கம்பங்களில் 
அரிக்கப்பட்ட உலோகமாகிறது 
இந்த உடல் 

எதிரிகளின் முகபிம்பங்கள் 
எங்கும் நிறைந்திருக்க 
சிரித்து கொண்டே
இருக்கும்போது ஓரிரண்டு கொலைகளும் நடை பெறுகிறது 

அந்த பரந்த வெளியை விட்டு 
வெளியேற்றி அழைத்து செல்லும் 
பேருறக்க அமைதிக்குள் வெடித்து கொண்டிருக்கும் 
அணுகுண்டுகளில் சின்னாபின்னமாகிறான் 
எங்களை செலுத்தும் மீகாமன்