மொட்டை மாடியும் ஒற்றை பட்டாம்-பூச்சியும் - பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி



தேனருந்தத்தான்
வந்திருக்கும் என
உறுதியாய் சொல்லிவிடமுடியாது;
யாருமற்றிருக்கும்
மாலைவேளையில்
என்னை மட்டும்
பார்க்க வேண்டுமென
பிரத்யேகமகாய் கூட வந்திருக்கலாம்;
நின்றுகொண்டு நான்
அதை வேடிக்கை பார்ப்பதை போல
காற்றில் அசையும்
பூவின் மேல்விழிம்பில்
லாவகமாய் உட்கார்ந்து
அதுவும் என்னை
வேடிக்கையாய் பார்க்கலாம்;
கடைசியாய்
தோட்டத்தின் வாயிலை
அடைக்கையில்
கிலுவம் முள் மரத்திலிருந்து
பறந்து போகையில்
பார்த்தது.
இந்தமுறை அதன் விடைபெறலுக்காக
நான் காத்திருந்தேன்.
மாநகரில் பட்டாம்பூச்சிகள்
இன்னும் வசிக்கின்றது
பூக்களையும்
இன்னும் சிலரது
புன்னகைகளையும் தேடிக்கொண்டு...
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif