நான் என்பது… பா.சரவணன்




நான் நானாக இருக்கும்போது
மகிழ்ச்சியாக இருக்கிறேன்
பொறுக்காத அவர்
தனது முகமூடிகளில் ஒன்றை
எனக்கு மாட்டி அழகுபார்க்கிறார்
ஆனால் அது பிடிக்காத இவர்
வேறு முகமூடியை
என் பின்னந்தலையில் மாட்டிவிடுகிறார்
பிறகு இருவரும்
என்னைச் சுற்றி வந்து
வேடதாரி என்றனர்

அதைக்கூட பொறுத்துக்கொண்டேன்                                                                            ஆனால் வர் கேட்டார் பாருங்கள் ஒரு கேள்வி
ப்ளைன் நானா பட்டர் நானா சார்?”