நாவற்பழச்சாயம் தோய்த்த விரைத்தக்குறியுடன் ஓர் அணில் குஞ்சு - மயிலன்


At World's End by Liebeistverboten

அப்படித்தான் 
அந்த கனவு
முடிந்தது

பச்சை நிற மறியாடொன்றை
அறுக்க அறுக்க 
அடர்நீலமாய் குருதிப்பெருக்கு
அதனை மிகச்சரியாக எட்டு
நாவற்பழ வண்ண பசுமாடுகள் 
மடக்மடக்கென குடித்துமடிகின்றன
எங்கிருந்தோ ஓடிவந்த 
அணில் குஞ்சொன்று
அவசர அவசரமாய் 
பசுப்பிரேதங்களைப் புணர்கின்றது
'இங்க என்ன பண்ற?' என

பறந்துவந்த வனதேவதை
அணிலைத் தூக்கி கொஞ்சுகிறாள்
அட! யாறிவள்?
வத்ஸலாவா?

அடச்சீ கனவென்று
உதறி விழிக்கிறேன்
படுக்கை விளிம்பில் அமர்ந்து
நமட்டுத்தனமாய்
சிரித்துக்கொண்டிருக்கும்
வத்ஸலாவை
அணைத்துக்கொள்கிறேன்
ஏங்கிக்கிடந்தவள் போல
வெறிகொண்டு இயங்குகிறாள்
கைப்பிடிக்குள் அவளின் எதுவும்
அடங்கவில்லை
முதுகில் அலையும் விரல்
அவளது தண்டுவடத்தில் 
ஒரு தொப்புள் இருப்பதைக் 
காட்டிக்கொடுக்கிறது
விரலை உள்ளே விட்டுப்பார்த்தேன்
பிசுப்பிசுப்பாக இருக்கிறது
துடிதுடித்துப்போனாள்
அதன்பின் எல்லாம் அவள் செயல்

கால் சராய் ஈரத்துடன் 
கண்விழித்துக்கொண்டேன்
மதிய உறக்கம்தான்
நான்கடி தள்ளியிருக்கும் 
நாற்காலியில்
தங்கை தேர்வுக்குப் படித்துக்கொண்டிருக்கிறாள்
பதற்றமாய் போர்வையைக்கொண்டு
வரைப்பட சங்கடத்தை
மறைத்துக்கொள்கிறேன்

அது சரி 
வத்ஸலா எப்போது 
என் தங்கையின்
நாற்காலிக்கு வந்தாள்?

வத்ஸலா! வத்ஸலா!
திரும்பவே இல்லை
புத்தகத்தின் நடுவே 
நாவற்பழச்சாயம் தோய்த்த 
விரைத்தக்குறியுடன்
ஓர் அணில் குஞ்சு
துள்ளிக் குதித்துக்கொண்டிருந்தது