காயத்ரிக்கான கவிதைகள் - நட. சிவகுமார்



1. பொம்மைகளை

பாலூன்களை

ரிமோட் கார்களையெல்லாம் பிடிக்கிறது

இவைகளை போலில்லாமல்



என்னையும் பிடிக்கிறது

செல்ல மகள் காயத்ரிக்கு






2. நான்

கோபப்பட்டால்.,

சிரித்தால்

ஏன்

அழுதால் கூட புரிகிறது

அவளுக்கு.

ஒரு கழுதை வயதாகியும்

எதையும் வெளிப்படுத்த முடியவில்லை

அவளைத் தவிர

யாரிடமும்.



3

எழுதிய கவிதைக்கு மேல்

பென்சிலால் கோடு வரைந்தாள்.

உச்சி முகர்ந்து

உற்றுப் பார்த்தேன்

என் கவிதையை விட அழகு.

4

போட்டோக்களுக்கு

முத்தம்

கண்ணாடிக்கு

முத்தம்

புது டுரஸ்ஸில் உள்ள

பூவுக்கு முத்தம்

ஏமாற்றி விட்டு

அலுவலகம் செல்லும்

அம்மாவுக்கும் கொடுக்கிறாள்