தனிமையும், முகமூடியும் - ராம்பிரசாத்




அணிந்திருந்த முகமூடியை
கழற்றி வைத்துவிட்டு
சற்று நேரம் காலார நடந்தேன்...

என்னை எல்லோரும்
வினோதமாகப் பார்த்தார்கள்...

அருகில் வர அஞ்சினார்கள்...
ஒதுக்கி வைத்தார்கள்...
ஒதுங்கிக் கொண்டார்கள்...

தனிமை பயம் துரத்த ஓடிச்சென்று 
கழற்றிய‌ முகமூடியின் பின்னால் 
ஒளிந்துகொண்டேன்...

பேசாமல்
தனிமையிடம் பயம் கொள்வதை விடுத்து
அன்பு செய்தால் என்ன என்று தோன்றியது...

கவிஞர் ராம்ப்ரசாத் ஒரு அறிமுகம்