கவிஞர் கலாப்ரியா சிறு குறிப்பு




கலாப்ரியாவின் இயற்பெயர் சோமசுந்தரம். வண்ணநிலவனின் கையெழுத்து இதழான பொருநையில் கவிதை எழுதும் போது முதலில் 'கலாப்ரியா' என்று புனைப்பெயர் சூட்டிக்கொண்டார். பின்னர் கசடதபற, வானம்பாடி, கணையாழி, தீபம் ஆகிய இதழ்களில் எழுதினார்.
கவிதைத் தொகுப்புகள்
  • வெள்ளம் (1973)
  • தீர்த்தயாத்திரை (1973)
  • மற்றாங்கே (1980)
  • எட்டயபுரம் (1982)
  • சுயம்வரம் மற்றும் கவிதைகள் (1985)
  • உலகெல்லாம் சூரியன் (1993)
  • கலாப்ரியா கவிதைகள் (1994)
  • கலாப்ரியா கவிதைகள் (2000)
  • அனிச்சம் (2000)
  • வனம் புகுதல் (2003)
  • எல்லாம் கலந்த காற்று (2008)
  • நினைவின் தாழ்வாரங்கள் - கட்டுரைத் தொகுப்பு (2009)
  • ஓடும் நதி - கட்டுரைத் தொகுப்பு (2010)
  • கலாப்ரியா கவிதைகள் - பேட்டிகள், திறனாய்வுகள், கருத்துகள் உள்ளடக்கியது (2010)
  • உருள் பெருந்தேர் - கட்டுரைத் தொகுப்பு (2011)
  • நான் நீ மீன் - கவிதைகள் (2011)
  • உளமுற்ற தீ - கவிதைகள் (2013)
  • சுவரொட்டி” - கட்டுரைத் தொகுப்பு (2013)
விருதுகள்
  • தமிழக அரசின் கலைமாமணி விருது
  • கவிஞர் சிற்பி இலக்கியவிருது
  • ஜஸ்டிஸ் வி. ஆர். கிருஷ்ணய்யர் விருது, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், நெல்லை
  • சிறந்த கட்டுரைத் தொகுப்பு - நினைவின் தாழ்வாரங்கள் - விகடன் விருது, மற்றும் சுஜாதா விருது (2010)
  • கண்ணதாசன் இலக்கியவிருது - கோவை - 2012
  • திருப்பூர் தமிழ்ச்சங்க விருது - உருள் பெருந்தேர்- உரைநடை/புதினம்- 2012
  • கவிஞர் தேவமகள் இலக்கிய விருது
  • கவிதைக்கணம் வாழ்நாள் சாதனையாளர் விருது
  • வைரமுத்துவின் கவிதைத் திருவிழாவில் சிறப்பிக்கப்பட்டது