·
பேரைக்
கேட்டபோது கடல் சொன்னது : “நதி”
·
புத்தப்
பாதையில் நிற்கும் முள்ளுக்கும் பூம்புன்னகை
·
கனாவின்
அறைக்குள் எரியும் விளக்கை அணைத்தாய் நீ
·
நீரில்
விழுந்த சிற்றெறும்பு நீந்திப் பெற்றது வாழ்வை
·
பட்டப்பகற்கனாவில்
இருள்போர்த்த கோட்டை
·
சாத்தான்
கையொப்பமிட்டுப் பழகிய கல்லறைத் தோட்டம்
·
ஆக்சிஜன்
சிலிண்டருக்குள்ளிருக்கிறது யமதர்மம்
·
நியூக்ளியசுக்குள்ளேயும்
இருக்கும் அனாதைக் குழந்தைக் கடவுள்
·
பெருங்காதலில்
வடித்த சந்தனச் சவப்பெட்டி
·
தேன்கிளி
பூவைப் பற்றிய பாடல்கள் புனைகிறது
·
பல
தெய்வமாய் வேடம் கட்டி ஆடுபவள் தெய்வம்
·
உன்
கூந்தலை வரைய நீலப் பேனா வாங்கினேன்
·
வெடித்துச்
சிரித்த கண்ணாடிப்பாத்திரம் கிடக்கிறது பல சில்லுகளாய்
·
கிழவனின்
மன மச்சு நிறைய விளையாட்டு பொம்மைகள்
·
மசூதியின்
மினாரில் வசிக்கிறது சூஃபிப் பட்சி ஒன்று
·
நான்கு
கைகளுடன் நடந்து போயின தெய்வங்கள்
·
கவிஞர்களின்
இந்தியா; கையில் திராட்சை
ரசம்
·
சிற்பத்தின்
வடிவில் சிக்கி கருங்கல்லானாள்
·
தத்துவச்
சிந்தனை சுமந்து தானே செத்து மடியும் ஈரடிகள்
·
அபோதத்தில்
ஜ்வலிக்கிற மண் சிற்பம் நீ
·
பச்சிலை மேடையில் பிராணியின் ஒற்றை நடனம்!
·
’பாலி’யில் எழுதட்டுமா ஒவ்வொரு காதல் வரிகளையும்
·
உடைந்த
சங்கில் அலையடிக்கும் சமுத்திரமே …
·
வெளியிடப்படாத
மனதில் அகப்பட்டேன்
·
தற்கொலை
முனையில் இருக்கிறது வாழ்வின் துளி வெளிச்சம்
·
வீணையின்
இசைஜுவாலை ’நீரோ’வை தகனம் செய்தது