மரணத்தின் கால்கள் - பா.சரவணன்

                

மரணத்தின் கால்கள்தான்
எவ்வளவு மென்மையானவை


நேற்று
சாலையில் இறந்து கிடந்த
பூனையைப் போலவோ
அன்று
ரயில் நிலைய நடைபாதையில்
தவறி விழுந்து
மூக்கிலிருந்து ரத்தம் வழிந்தவனைப் போலவோ
தண்டவாளங்களிடையே
கருத்த துண்டங்களாய்க்
கிடந்தவளைப் போலவோ
ஆகிவிடாமல்

யானைபோல் குனிந்து
கால் மடக்கி
ஏறியபின்
எம்மை
வலிகாமல் தூக்கிச்செல்லும்
மரணத்தின் கால்கள்தான்
எவ்வளவு மென்மையானவை