பொன்.வாசுதேவன் கவிஞர். சிறுகதைகள், கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். ‘அகநாழிகை’ சிற்றிதழின் ஆசிரியர். ‘ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை’ (2010) உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. ‘உன்மத்தப் பித்தன்’ கவிதைத் தொகுப்பும், ‘அற்ற குளத்து அறுநீர்ப் பறவை’ மற்றும் ‘அரும்பெறல்’ என்கிற கட்டுரைத் தொகுப்புகள் அச்சில் உள்ளது. வழக்குரைஞராகப் பணி. ‘அகநாழிகை’ என்ற
புத்தகக் கடையும்,
புத்தக இணைய விற்பனையும் செய்து
வருகிறார். திருவண்ணாமலையைச் சேர்ந்த இவர் தற்போது
மதுராந்தகத்தில் வசித்து வருகிறார்.