சமகால மலையாளக் கவிதைகள் - என்.டி ராஜ்குமார் (1)



 பள்ளிக்கூடம் - பினும் பள்ளிப்பாடு



 

பள்ளிக்கூடத்தில் நாங்கள்
 குடியிருந்திருக்கிறோம்

சில சமயங்களில் மட்டும்
கல்வி அபயமாகியிருக்கிறது

அந்திசாயும் நேரத்தில்
ஏதோ ஒரு வகுப்பறையில் இருந்து ஒலிக்கின்ற
சந்தியாநாமத்தை கேட்டு நான்
நரகவேதனைப் பட்டிருக்கிறேன்

இருட்டுக்குள் இருக்கும்
கஞ்சிப் பானையில்
புத்தகம் மூழ்கிக் கிடக்கையில்

இடிமுழக்கத்தோடு வரும் காற்று
எங்கள் விளக்கொளியை
விரட்டியடித்திருக்கிறது


ஒருமுறை மின்னலின்
ஒளிக்கற்றை பளிச்சிட்டதில்

எங்களுக்கொரு
குடும்ப்ப் புகைப்படம் இருக்கிறது

பழங்கதைகளை
போர்த்திக் கொண்டிருக்கும் பாட்டன்

வாத்தியார் தேர்ந்தெடுத்த
திறமையுள்ளவனின் மேஜையில்
பகலைத் தேடித் தேடி
அலுத்துப் போயிருக்கையில்

தண்ணீரில் மூழ்கிய வயலோர வீடு
ஒரு கழுதையை போல
தலை குனிந்திருந்தது

படித்த சூத்திரன்
சாலையை கடந்து செல்கையில்
திண்ணையில் இருந்தபடி நான்
மாய்ந்து போயிருக்கிறேன்

சத்துணவு சமைத்துக் கொண்டிருக்கும் அம்மையின்
வியர்த்த குடிசைக்குள்

அவர்கள் இருந்து களிக்கும் குலாம்பரிசின்
ராணியை வெட்டி சரிக்கிற போது

பப்பாளியும் பலாவும் இட்டு விரவிய
சளித்துப் போன கறி வந்து விழுகிறது

ரேஷன் கஞ்சியில்
இப்போது நான் படித்த பள்ளிக்கூடத்தின்
ஜன்னல் திட்டில் இருந்து
மலம் கழிக்கையில்’

அது விழுந்த தண்ணீருக்குள் இருந்தும்
அலம்பிக் கொண்டிருக்கிறது ஒரு பள்ளிக்கூடம்

கவிஞர் பினும் பள்ளிப்பாடு சிறு குறிப்பு