இரண்டு யோனி - நரன்




மூடிய மண்ணின் அடியாழத்தில்  நதியோடிக்  கொண்டிருக்கிறது .
எண்ணிக்கையில் ஐந்து பெண்களிருக்கும் அறையில்
 கர்ப்பஸ்த்ரி  இரண்டு யோனியோடிருக்கிறாள்.
 சமவெளியின் ஒரு முனையிலமர்ந்து பறவை எச்சமிடக்  காத்திருக்கிறது .
விழும் விதை- பெருவனத்தை கொணரும் .
இத்தாது  மணலில்  வெட்டி எடுக்கப்படும் இரும்பு தாதுவிலிருந்து ஒரு கொலைக்  கருவி .
பிறந்ததிலலிருந்து மறைந்து மறைந்து அவனின் 27வயதின் மேல் விழுந்தது .அக்கொலைப்பழி .

கவிஞர் நரன் சிறுகுறிப்பு