மயூரா கவிதைகள்




எதிர்பால்


இங்கேயே இருந்து 
கொள்.
பெரிதாக கவலைபடாதே.
நான் இருக்கிறேன்.
வலிகளுக்கு நிவாரணியாக
உன் வருத்ததிற்கு ஆறுதலாக
நான் இருக்கிறேன்.
தனிமை உனக்கு
வேண்டாம்.
இருந்தோ இல்லாமலோ
நான் இருக்கிறேன்

மாயையின் விளிம்பில் 
பிரபஞ்சத்தின் விசாலத்தில்
மனக்கிடங்கின் ஆழத்தில்
நான் இருக்கிறேன்.

அமைதியாக இரு
ஆழ்மன நெருப்பினை 
அணைய விடு


உன் ஆனந்தம் 
என் வலிமை.

நான் பேசுகிறேன்


என் குலம் , மதம் , சாதி
பார்த்து பேசுகிறேன்.
என் ஊர், என் நிறம்
பார்த்து பேசுகிறேன்.
என் மரபணுக்கள் என்ன
சொல்கிறதோ அதன் படியே
பேசுகிறேன்.
நான் பேசுவதும் நினைப்பதும்
மட்டுமே சரி
என்று எண்ணி
மமதையுடன் பேசுகிறேன்.
எனக்கு பிடிக்காதவைகள்
கேவலமாகவும்,
என்னால் முடியாதவை தரம்
இல்லாததாகவும் கற்பனை
செய்து கொண்டு பேசுகிறேன்.
என் தவறுகளை முடிந்தவரை
மறைத்து பேசுகிறேன்.
சில நேரத்தில் சிரித்துகொண்டே
வஞ்சகத்துடன் பேசுகிறேன்.
பின்பு ஒரு நாள் மரித்து
போகிறேன்.
என் பிணத்தின் மீது 
துர்நாற்றம் வீசுகிறது.