தனியாக
வெற்றிடவானத்தில் பறத்தல்
அலாதியானது.
சிறகடிப்புகள் இல்லாமல்
நதியில் வீழ்ந்து ஓடும்
ஒரு மலரைப்போல
ஆகாசத்தை வருடிக்கொண்டே பறத்தல்
தவம் போன்றது
கூடுகள், குஞ்சுகள்
இரை, இணை இவை
மட்டுமல்ல
பறவை – ஏதோ
நினைப்பில்
இலக்கின்றி வீட்டைவிட்டுப் புறப்பட்டுவிடும்
என் பைத்தியக்காரத்தனமும்தான்.
பறத்தல்தான்
எல்லாவற்றையும் இயல்பாக வைக்கிறது
அப்பொழுதுதான்
கூடுகளும் கொஞ்சம் இளைப்பாறுகின்றன.