மேற்கத்திய சர்ரியலிய கவிதைகள் - ஆர்.அபிலாஷ்




என் கையில் காயம் மீது ஜனவரி சுற்றிக் கொள்கிறது
-                                                                                                                                          - சார்லஸ் ஹென்ரி போர்டு

என் கையில் காயம் மீது ஜனவரி சுற்றிக் கொள்கிறது
ஜனவரி, ஒரு திருட்டு சிறுவனைப் போல, நகையை ஒளித்து வைக்கிறது,
அந்தி, ஒரு பளீர் குருதி வழியும் சமன்பாடு.

பகல் இரவின் பள்ளத்தின் முன் தயங்கி நிற்கும் ஒரு கவிதையை போன்ற
ஒரு கவிதையை , பட்டவர்த்தமாய், தனக்கென எழுதுகிறது.

நாளை, இந்த திறந்த புண் ஒரு கண்ணாகும்:
கன்னத்தில் வழிந்தேறும் ஒரு பனித்துளியாகும்,
தன் மனதை மாற்றிக் கொண்ட ஒரு கண்ணீர்த்துளியாகும்.