மேகங்களிலிருந்து தான் அது
கிடைக்குமென்றெண்ணி வாளாவிருந்துவிட்டோம்
அஷ்ட கோணலாகி புரியாத புதிர் போல்
பரவி படர்ந்த போதும்
பரவசத்தால் புளங்காகிதம் நமக்கு
ஏக்கத்தையும் எதிர்பார்ப்பையும் மட்டுமே
முதலீட்டாய் கொண்டமர்ந்து விழைகிறோம்
விடியலை முடக்கிப் போட
பொங்கும் பிரவாகம் ஊற்றுக்கண்ணாய்
பீறிடும் பொழுதுகளில் மட்டுமே
நம்மால் விளங்கிக் கொள்ளூம் சுயம்
எல்லா கடிவாளங்களூம்
இளகிப் போகும் அரிய காலத்தில்
வெற்றாய் விரிந்திடும் வானம்
நிறமிலியாய் தன்னை பறைசாற்றிக்கொண்டு
நம் கண்களில் தான் கசடு
'நீல'மென்று நீளமாய் முழங்கும்
நமது யதார்த்தங்கள்
எங்கும் வெறுமையென்பது புரியாமல்