மூன்று இந்தோனேஷியக் கவிதைகள் - ஸப்பார்தி ஜோகோ தமோனோ-(Sapardi Djoko Damono)




(தமிழில் கலாப்ரியா,ஆங்கில மொழி பெயர்ப்பு: ஜான் மெக்லைன், நன்றி, கவிதா ஆசியா, பாரத் பவன் வெளியீடு 1990, போபால்,


1
நான் வெறுமனே நினைக்கிறேன்

நான் வெறுமனே உன்னைக் காதலிக்க மட்டும்
நினைக்கிறேன்:
வார்த்தைகளால் வெளிப்படுத்த விரும்பவில்லை
ஏனெனில் தூண்டுதலால் தீ சாம்பலாக மாறிவிடும்

நான் வெறுமனே உன்னைக் காதலிக்க மட்டும்
நினைக்கிறேன்:
சைகைளில் தெரியப்படுத்த விரும்பவில்லை
ஏனெனில் கருக்கொண்ட மேகம் பொழிந்து தீர்ந்துவிடும்
2
நாம் மூன்று பேர்:
இந்த அறையினுள், நாம் மூன்று பேர்:
நான், கத்தி, மற்றும் வார்த்தை-
உனக்குத் தெரியும், அதன் கூர்மையில் பசிய ரத்தம் இருக்கையில்
கத்தி ஒரு கத்தி மட்டுமே
அது என் ரத்தமா அல்லது வார்த்தையின்  ரத்தமா என்பது
ஒரு விஷயமில்லை
                       
3.

வார்த்தைகளைக் கடந்து நாம் கண்டு கொள்வது என்ன:
ஒரு பூந்தோட்டம்? அளவிட முடியாப் பெருவெளி?
பூந்தோட்டம், அர்த்தங்களை நிறைய உணர்த்துவதில்லை
பெருவெளியிலோ, அர்த்தத்தின் சாரமென்பது சூன்யமே

           


                           
                            


                  -